அருவி ...........
வாழ்க்கை என்றுமே சிராக இருப்பதில்லை
என்பதை உணர்த்தியது
இரவு பகல் ..........
வாழ்வு இன்பமும் துன்பமும் நிறைந்ததை
படம் போட்டு காட்டியது
வாகன நெரிசல் ...........
மனிதன் ஒரு பொறுமை அற்ற பிராணி என்பதை
சுட்டிக் காட்டியது
பசிக் கொடுமை ..........
மனித குலத்தின் சுய நலத்தை
வெளிப்படுத்தியது
காமக் களியாட்டம் ........
நமக்குள் மிருகம் மறைந்து இருப்பதை
மறைமுகமாக வெளியே கொணர்ந்தது
குழந்தை .........
நம்முள் இருந்த தெய்வீகத்தை கொன்று விட்டதை
நினைவுறுத்தி ஏளனம் செய்கிறது!