Friday, February 27, 2009

ஏன் இந்திய அரசாங்கம் ஈழம் பிரச்சனையில் மௌனம்! என் மனக் குமுரலை கீழே உள்ள கவிதையின் மூழம் கொட்டி தீர்க்கிறேன்!

ஐயோ! என் மனம் குமுறுதே!!!

ரத்தக் காட்டேரி எம்மக்களின்
குருதியை ருசி பார்க்க கிளம்பிட்டதே
குழந்தைகளின் அழுகுரல்
என் தூக்கத்தை பறித்து பல நாட்கள் ஆயின

ஐயோ! என் மனம் குமுறுதே!!!

அதோ ஒரு தலை ராவணண்
அதிகாரத்தின் உச்சியில் உட்கார்ந்துக்கொண்டு
என் சகோதரர்களை கொன்று குவிக்கிறான்
இந்த கொடுமையைக் கேட்க நாதியில்லாமல்
போய் விட்டது என் சமுகம்

ஐயோ! என் மனம் குமுறுதே!!!

இட்லர் மறுபிறவி எடுத்து விட்டான்
என்று நீ கூறியபோது நான் நம்பவில்லை
இதோ அந்த கொடும்பாவியின்
இன அழிப்பு வேட்டை நன்றே நடக்கின்றது
தட்டிக்கேட்க என் முத்தமிழ் நாயகன் வருவான்
என்று எதிர்பார்த்த எனக்கு…..முகத்தில் கரி
மருத்துவமனையில் தஞ்சம் கொண்டானாம்
என் முத்தமிழ் நாயகன்

ஐயோ! என் மனம் குமுறுதே!!!

எம்மதமும் சம்மதம் என்ற
என் மக்களுக்கு போர்க்கொடி
தூக்கி புறப்பட்ட அமைதி புறாக்கள்
“கச்சாமி” மந்திரத்தை உச்சரித்த குள்ளநரிகள்
“நிர்வான” சுரபியை கூப்பிட்டேன்
அவன் தூக்குப் போட்டுக்கொண்டனாம்….செய்தி வந்தது!

ஐயோ! என் மனம் குமுறுதே!!!

கண்ணகி வேஷத்தில் மறைந்திருக்கும்
“பிஷா” கோபுரக் நாடகக்காரி
தன் வஞ்சத்தை தீர்க்க
இன்று என் மக்களின் இன அழிப்பு வேட்டைக்கு உடந்தை
இவள் ராஜ அசுரனின் வப்பாட்டியோ?
என் தமிழ் மக்களே
பொங்கி எழுங்கள்
இவர்கள் சந்ததியை ஒழித்திடுவோம்
அப்பொழுதாவது என் மக்களின்
ஆத்துமா சாந்தி அடையட்டும்
அரசியல் நரிகளுக்கும் புத்தி வரட்டும்

பிரான்சிஸ் சைமன், பினாங்கு,மலேசியா.

Monday, February 16, 2009

புதைக்குழி நாயகன்

பள்ளி வயதில்
புதைக்குழிகளுக்கும்
பிணங்களை உண்ணும்
உடும்புகளுக்கும் ஒரு தொடர்பு உண்டு
என்பதை அறிந்துள்ளேன்

இன்று
உனக்கும் புதைக்குழிக்கும்
ஜென்ம தொடர்பு உள்ளதை
என் மக்களின் மரண ஓலையின்
மூலம் தெரிந்துக் கொண்டேன்

ஏய்! ராஜ பக்சே
சரித்திரத்தில் இன்று முதல்
நீ ஒருவன் மட்டும்
"புதைக்குழிகளின் நாயகன்" என்று
சித்தரிக்கப் படுவாய்
இது நிச்ச்யம்!!!

Sunday, February 8, 2009

சிரிப்பு வருது..சிரிப்பு வருது..சிரிக்க தெரிந்த சிரிப்பு வருது..

அன்பார்ந்த தமிழ் மக்களே!

சற்று முன், வழக்கம் போல் "மலேசியா கினி" உலா வந்தேன். ஒரே ஒரு தகவல் மட்டும் என் கவனத்தை ஈர்த்தது......தலைப்பை படிததவுடனே சிரித்து விட்டேன். என்ன செய்தி அது என்று கேட்கிறிற்களா...

"Zambry pledge RM100,000 for temple"

யார் அந்த Zanbry? நம்ம பேராக் புதிய முதல்வர்தான்!

நம்ம முதல்வர் சரி UMNO புத்திரர்களும் சரி நம்ம சமுதாயத்த எப்படி அடித்த எங்க சாய்வாங்கினு நல்லாவே தெரிந்து வச்சிரிக்காங்க......

கோயில்லுக்கு பணம் தந்தாவே நம்ம மக்க சாய்ந்திடுவாங்கனு நான் அனுபவத்தில் புரிந்துகொண்டது.....ஆன இப்ப எப்படி என்று தெரியல.



நண்பர்களே நாம் ஏமாறக்கூடாது.......கோயிலுக்கு பணத்த அழித்தது போதும் இனிமேலாவது கல்விக்கு முதலிடம் கொடுக்க கத்துக்கவும்!

அது சரி, நம்மல எத்தனி பேர் இந்த வருட பத்து கேவ்ஸ் தைப்பூசத்த புறக்கனித்தோம்!!! வங்க கொஞ்ச சிந்திப்போம்!

Wednesday, February 4, 2009

விரைந்து வா!

விரைந்து வா!

அன்று….நள்ளிரவு
உலகின் கவனம் முழுவதும்
உன் மேல்…2008 –ன் மாமனிதன் நீதானே
இருக்காத பின்னே!

என்னக் கூறப்போகிறாய்
என்னச் செய்யப் போகிறாய்,
உன் வாக்குறுதிதான் என்ன என்று
இவ்வுலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது

அன்று
“பிராவுன்” கொடுமையில் பாடுப்பட்ட யூதர்களை
விடுவிக்க வந்த “மோயீசனை” போல்

இன்று
இராவணணின் “இன அழிப்பு” வேட்டையை
தட்டிக் கேட்க வந்தவன் “நீ” என்று

…………என் ஆழ்மனம் பறைச்சாற்றிக்கொண்டிருந்தது

உன் உதட்டினிலிருந்து வெடித்த ஒவ்வொரு வார்த்தையும்
அரசியல் நரிகளின் இரத்த வெறிக்கு பலியாகிக்கொண்டிருக்கும்
எம் மக்களுக்கு புத்துயிர் கிடைக்க வித்திட்டது
ஆனந்தத்தில் இலயத்துப்போயிருந்தேன்!!!

இரு விரல்கள் கொண்டு
கண்ணத்தை லேசாக கிள்ளி பார்க்கிறேன்
“வலி” நான் நிஜ வாழ்க்கையில்தான் இருக்கிறேன்
உறுதிப்படுத்தியது

உன் வார்த்தைகள் நிஜமானவை
உன் வாக்குறுதி உறுதியானவை
என் எண்ணங்கள் ஞாயமானவை
என்று இவ்வுலகிற்கு உறுதிப்படுத்த
நீ விரைந்து வருவாய் என
என் தமிழினம் காத்துக்கொண்டிருக்கிறது


தூக்கத்தை பறிகொடுத்து
உன் பேச்சுரையில் மயங்கிக் கிடந்த
கோடிக்கனக்கான மனித மந்தையில்
நானும் ஒருவன் என்று
கூறிப் பெருமைப்படுவதா இல்லை வெட்கப்படுவதா என்று
எனக்கு தெரியவில்லை…..உன் வருகை பதில் சொல்லட்டும்
இப்பொழுது நான் தூங்க விரும்புகிறேன்!!!

பிரான்சிஸ் சைமன்
பினாங்கு, மலேசியா.