Thursday, November 6, 2008

இதுதான் நீ

நான் சிறு குழந்தையாய் இருந்தபோது
என்னைபோல் உன்னையும் கடவுள் என்றே கருதினேன்
விளையாட்டு வயதில் உன்னை நண்பனாக நேசித்தேன்
பருவ வயதில் கொஞ்சம் புலப்பட ஆரம்பித்தது
நட்பை நீ நாசமாக்கினை என்று
அனுபவம் போதிக்கும் வயதில்
அன்புப் பரிமாற்றத்தின்
அமுதம் அறியாதவன் என உணர்ந்தேன்
காதோரம் நரை விழுந்த காலத்தில்
நீ ஒற்றுமையை விலை பேசுபவன் என்று
மனம் நொந்தேன்
கொஞ்சம் முதிர்ந்த வயதில்
பொறாமை உள்ளடக்கி
முதுகில் குத்துபவன்
எனப் புரிந்து கொண்டேன்
ஏத்தனை வயதானாலும்
மற்றவனக்கு கைகட்டி
கூலி செய்வபவன் என மூர்க்கமானேன்
இப்போது நான் அந்திமத்து விளிம்பில்
உன்னை உன்னையாக்க
முயற்சியில் என்னால் எதுவும் முடியாது போலும் !!!

No comments: