Wednesday, October 29, 2008

கறுப்பு மனிதனின் கதை

வெள்ளையன் ஒருவன் ஒரு கறுப்பு இன குழந்தையை வளர்த்தானாம். அந்த குழந்தையும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் வளர்ந்து பெரியவனாகியது.
வெள்ளையனுக்கு ஒரே ஒரு குறைதானாம் . அவன் இட்ட ஆணைகளை கறுப்பினத்தவன் செய்ய வேண்டுமானால் வெள்ளையன் கருப்பனை ஒரு அடியாவது அடிக்க வேண்டுமாம். இல்லையேல் அவன் அந்த வேலையை செய்ய மாட்டானாம் !
இப்படியே நாட்கள் மாதங்களாயின .....மாதங்கள் வருடங்களாயின !
ஒரு நாள் , வழக்கம் போல் வெள்ளையன் அவனை அடிக்க நேர்ந்தது .........என்ன ஆச்சரியம் கறுப்பன் திடிரென்று வெள்ளையனை எதிர்த்து " ஏன் என்னை அடிக்கிறாய் என்று கேட்டானாம்.
வெள்ளையனின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது !
"மகனே நீ "ஏன் " என்ற கேள்வி கேட்டவுடனேயே நீ முழு மனிதனாகிவிட்டைமேலும் இனி உன் வாழ்வை நீயே நிர்மாணிக்க கற்று கொள்வாய்" என்று சொல்லி அவனை கட்டி அனைத்து கொண்டார்.

No comments: