ஒரு வருடத்திற்கு முன்பு………..
மலையடிவாரத்தில்
ஆட்டு மந்தைகளைப்போல்
உன்னை வளைத்துப் பிடித்து
ஜல அபிஷேகம் செய்து
பின்னர் காவல்நாய்களிடம்
ஒப்படைத்தன
செம்மறி ஆடைத் தரித்த
நரிகள்
சீறி எழுந்தன
ஆட்டு மந்தைகள்
போகமாட்டோம்!… போகமாட்டோம்!
இனி அந்த “மலையடிவாரத்திற்கு” என்று
உறுதி மொழி கொண்டன
ஒரு வருடத்திற்கு பின்பு…………
பகல் கொள்ளை நரிகளின்
உறைவிடமான
அந்த “மலையடிவாரத்தில்
மீண்டும் சங்கமத்தின
ஆட்டு மந்தைகள்
செய்தியை படித்தேன்
ஒரே நேரத்தில் சிரிப்பும் அழுகையும்
எனக்கு தரிசனம்!!!
அடுத்த வருடமாவது
ஆட்டு மந்தைகளுக்கு
பகுத்தறிவு பிறக்கட்டும் என்று
மலையடிவாரத்தில் குடியிருக்கும் அந்த
“ஞானப்பண்டிதனைக்” கேட்டுக்கொள்கிறேன்.
Sunday, March 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நன்றி நன்பரே
Post a Comment