Thursday, November 3, 2011

machi open the bottle

சில வருடங்கலாக நான் எளுதவில்லை...மன்னிக்கவும்.
இடையில் நான் மஙகாத்தா படம் பார்த்தேன். படத்தை ரசித்தேன் ஆணால் மேல் குறிக்கப்பட்ட பாடலை என்னால் ஜீரனிக்க முடியவில்லை.
ஒட்டு மொத்தமாக தமிழனை குடிகாரர்கள் என்ற முத்திறையை குத்தி கொண்டதுபோல்
எனக்கு மனதில் படுகிறது
கொடுமையிலும் கொடுமை.......அஸ்ட்ரோ தயாரித்த தீபாவழி நிகழ்ச்சியில் திரைபட நடிகர் பிரேம்ஜி நிகழ்ச்சி இறுதியில் கூறிய "machi open the bottle" வசனம்......
என்ன கொடுமை சார்................

Sunday, March 22, 2009

ஆட்டு மந்தைகள்

ஒரு வருடத்திற்கு முன்பு………..

மலையடிவாரத்தில்
ஆட்டு மந்தைகளைப்போல்
உன்னை வளைத்துப் பிடித்து
ஜல அபிஷேகம் செய்து
பின்னர் காவல்நாய்களிடம்
ஒப்படைத்தன
செம்மறி ஆடைத் தரித்த
நரிகள்

சீறி எழுந்தன
ஆட்டு மந்தைகள்
போகமாட்டோம்!… போகமாட்டோம்!
இனி அந்த “மலையடிவாரத்திற்கு” என்று
உறுதி மொழி கொண்டன

ஒரு வருடத்திற்கு பின்பு…………

பகல் கொள்ளை நரிகளின்
உறைவிடமான
அந்த “மலையடிவாரத்தில்
மீண்டும் சங்கமத்தின
ஆட்டு மந்தைகள்

செய்தியை படித்தேன்
ஒரே நேரத்தில் சிரிப்பும் அழுகையும்
எனக்கு தரிசனம்!!!

அடுத்த வருடமாவது
ஆட்டு மந்தைகளுக்கு
பகுத்தறிவு பிறக்கட்டும் என்று
மலையடிவாரத்தில் குடியிருக்கும் அந்த
“ஞானப்பண்டிதனைக்” கேட்டுக்கொள்கிறேன்.

கவித்தமிழ்: அண்ணன் வேதமூர்த்தி

கவித்தமிழ்: அண்ணன் வேதமூர்த்தி

Saturday, March 21, 2009

மனிதனின் அபார கண்டுப்பிடிப்பு

உங்களுக்கு தெரியுமா என்னவென்று? சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள்.
அ. மனிதன் ஒரு சிந்திக்கும் பிராணி என்பது
அவனுக்கு சிந்திக்கும் திறன் இருப்பதை அவன் தெரிந்துகொண்டது. மேலும் தன் சிந்திக்கும் திறனால் அவன் ஒரு பணியை நிர்மாணித்து பின்னர் அதை செயல்படுத்துவதும்தான் மனிதனின் முதல்கண்டுபிடிப்பு.
மிருகங்களுக்கு சிந்திக்கும் திறன் இல்லை.அதனால்தான் இன்றுவரை மிருகங்களின் ராஜ்யத்தில் மாற்றம் ஏதும் இல்லை.

ஆ. மனிதன் தன் எண்னத்திற்க ஏற்றபடி செதுக்கபடுகிறான் தெரிந்து கொண்டது மற்றொரு அபார கண்டுபிடுப்பு
மனிதனின் இற்ந்த காலம்,நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் அவனுடைய எண்ணங்களை பொருத்தே அமைகிறது. பொதுவாக, இதைதான் தன்முனைப்பு பட்டறையில் பெரும்பாலும் விவாதிக்கப்படுகிறது.

ஆக, நாம் இந்த இரு கண்டுபிடிப்பின் மூலம் மனிதன் ...மனிதனாக வாழக் ஏன் இன்னும் முடியவில்லை என்பது இன்னமும் ஒரு புதிராக இருப்பது என்னை வியக்க வைக்கிறது!

Friday, February 27, 2009

ஏன் இந்திய அரசாங்கம் ஈழம் பிரச்சனையில் மௌனம்! என் மனக் குமுரலை கீழே உள்ள கவிதையின் மூழம் கொட்டி தீர்க்கிறேன்!

ஐயோ! என் மனம் குமுறுதே!!!

ரத்தக் காட்டேரி எம்மக்களின்
குருதியை ருசி பார்க்க கிளம்பிட்டதே
குழந்தைகளின் அழுகுரல்
என் தூக்கத்தை பறித்து பல நாட்கள் ஆயின

ஐயோ! என் மனம் குமுறுதே!!!

அதோ ஒரு தலை ராவணண்
அதிகாரத்தின் உச்சியில் உட்கார்ந்துக்கொண்டு
என் சகோதரர்களை கொன்று குவிக்கிறான்
இந்த கொடுமையைக் கேட்க நாதியில்லாமல்
போய் விட்டது என் சமுகம்

ஐயோ! என் மனம் குமுறுதே!!!

இட்லர் மறுபிறவி எடுத்து விட்டான்
என்று நீ கூறியபோது நான் நம்பவில்லை
இதோ அந்த கொடும்பாவியின்
இன அழிப்பு வேட்டை நன்றே நடக்கின்றது
தட்டிக்கேட்க என் முத்தமிழ் நாயகன் வருவான்
என்று எதிர்பார்த்த எனக்கு…..முகத்தில் கரி
மருத்துவமனையில் தஞ்சம் கொண்டானாம்
என் முத்தமிழ் நாயகன்

ஐயோ! என் மனம் குமுறுதே!!!

எம்மதமும் சம்மதம் என்ற
என் மக்களுக்கு போர்க்கொடி
தூக்கி புறப்பட்ட அமைதி புறாக்கள்
“கச்சாமி” மந்திரத்தை உச்சரித்த குள்ளநரிகள்
“நிர்வான” சுரபியை கூப்பிட்டேன்
அவன் தூக்குப் போட்டுக்கொண்டனாம்….செய்தி வந்தது!

ஐயோ! என் மனம் குமுறுதே!!!

கண்ணகி வேஷத்தில் மறைந்திருக்கும்
“பிஷா” கோபுரக் நாடகக்காரி
தன் வஞ்சத்தை தீர்க்க
இன்று என் மக்களின் இன அழிப்பு வேட்டைக்கு உடந்தை
இவள் ராஜ அசுரனின் வப்பாட்டியோ?
என் தமிழ் மக்களே
பொங்கி எழுங்கள்
இவர்கள் சந்ததியை ஒழித்திடுவோம்
அப்பொழுதாவது என் மக்களின்
ஆத்துமா சாந்தி அடையட்டும்
அரசியல் நரிகளுக்கும் புத்தி வரட்டும்

பிரான்சிஸ் சைமன், பினாங்கு,மலேசியா.

Monday, February 16, 2009

புதைக்குழி நாயகன்

பள்ளி வயதில்
புதைக்குழிகளுக்கும்
பிணங்களை உண்ணும்
உடும்புகளுக்கும் ஒரு தொடர்பு உண்டு
என்பதை அறிந்துள்ளேன்

இன்று
உனக்கும் புதைக்குழிக்கும்
ஜென்ம தொடர்பு உள்ளதை
என் மக்களின் மரண ஓலையின்
மூலம் தெரிந்துக் கொண்டேன்

ஏய்! ராஜ பக்சே
சரித்திரத்தில் இன்று முதல்
நீ ஒருவன் மட்டும்
"புதைக்குழிகளின் நாயகன்" என்று
சித்தரிக்கப் படுவாய்
இது நிச்ச்யம்!!!

Sunday, February 8, 2009

சிரிப்பு வருது..சிரிப்பு வருது..சிரிக்க தெரிந்த சிரிப்பு வருது..

அன்பார்ந்த தமிழ் மக்களே!

சற்று முன், வழக்கம் போல் "மலேசியா கினி" உலா வந்தேன். ஒரே ஒரு தகவல் மட்டும் என் கவனத்தை ஈர்த்தது......தலைப்பை படிததவுடனே சிரித்து விட்டேன். என்ன செய்தி அது என்று கேட்கிறிற்களா...

"Zambry pledge RM100,000 for temple"

யார் அந்த Zanbry? நம்ம பேராக் புதிய முதல்வர்தான்!

நம்ம முதல்வர் சரி UMNO புத்திரர்களும் சரி நம்ம சமுதாயத்த எப்படி அடித்த எங்க சாய்வாங்கினு நல்லாவே தெரிந்து வச்சிரிக்காங்க......

கோயில்லுக்கு பணம் தந்தாவே நம்ம மக்க சாய்ந்திடுவாங்கனு நான் அனுபவத்தில் புரிந்துகொண்டது.....ஆன இப்ப எப்படி என்று தெரியல.



நண்பர்களே நாம் ஏமாறக்கூடாது.......கோயிலுக்கு பணத்த அழித்தது போதும் இனிமேலாவது கல்விக்கு முதலிடம் கொடுக்க கத்துக்கவும்!

அது சரி, நம்மல எத்தனி பேர் இந்த வருட பத்து கேவ்ஸ் தைப்பூசத்த புறக்கனித்தோம்!!! வங்க கொஞ்ச சிந்திப்போம்!